உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

நடுவானில் விமான அதிர்வு

போயிங் 787-9 ட்ரீம்லைனர் ரகத்தை சேர்ந்த ஏர் யூரோப்பா விமானம் 325 பயணிகளுடன் ஸ்பெயினிலிருந்து உருகுவே நோக்கி பயணித்த போது நடுவானில் அதிர்வுக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க இவ்வவசர நிலையை கருத்தில் கொண்டு குறித்த விமானம் பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவ்வதிர்வின் காரணமாக விமானத்தில் பயணித்த 30 பயணிகள் காயமடைந்துள்ளதோடு அவர்களுக்கு விமான நிலையத்திலேயே முதலுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் காயமடைந்தவர்களில் 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களென ஏர் யூரோப்பா மற்றும் விமான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க