விளையாட்டு செய்திகள்

ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை, காலவரையறையின்றி ஒத்திவைக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்த பின்னர், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவிருந்தது. ஜூலை 25ஆம், 27ஆம் மற்றும் 29ஆம் ஆகிய திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் , இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இத்தொடரை, ஒத்திவைப்பதற்கு   பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

கருத்து தெரிவிக்க