இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

நேற்று (ஜூன் 24) முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் குமுது கட்டபொலுகே தெரிவித்துள்ளார்.

குறித்த பணிப்புறக்கணிப்பானது கல்விசாரா ஊழியர்களுக்கு சம்பள உயர்வின்மை,பதவி உயர்வின்மை தொடர்பாக ஏற்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வுகோரும் முகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லையெனில் குறித்த பணிப்புறக்கணிப்பானது தொடருமென அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க