புதியவைவணிக செய்திகள்

EPF க்கான டிஜிட்டல் தரவு அமைப்பு குறித்து கருத்து

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தொழிலாளர் திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் பாராளுமன்றத்தில் அரசாங்க கணக்குக்குழுவினால் விவாதிக்கப்பட்டு கருத்து வெளியிடப்பட்டிருந்தது.

இதன்போது மத்திய வங்கியும் தொழிலாளர் திணைக்களமும் இணைந்து ஊழியர் நலன்புரி கொடுப்பனவுகள் உள்ளிட்ட தரவுகளைப் பெறக்கூடிய டிஜிட்டல் தரவு அமைப்பைத் தயாரிக்குமாறு தொழிலாளர் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தொழிலாளர் திணைக்களத்தில் முதலாளிகளைப் பதிவு செய்த பின்னர் அது தொடர்பான வருங்கால வைப்பு நிதிக்கான கொடுப்பனவுகள் மத்திய வங்கிக்கு வழங்கப்படுவதாகவும் மத்திய வங்கி ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் தொழிலாளர் திணைக்களத்திற்கு கொடுப்பனவுகள் பற்றிய தரவுகளை வழங்குவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க