இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மின்கம்பம் விழுந்ததில் ஒருவர் பலி

நேற்று (ஜூன் 20) ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெதகத பிரதேசத்தில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான லொறியிலிருந்து மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் மீது மின்கம்பம் விழுந்ததில் குறித்த ஊழியர் உயிரிழந்துள்ளார்.

குறித்த ஊழியர் மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் பணிப்புரியும் 23 வயதுடைய அம்பகமுவ உடபுலத்கம பிரதேசத்தை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தற்போது ஹங்குரன்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க