இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மின்சாரம் தாக்கி மாணவி பலி

நுகேகொட மஹாமாயா பெண்கள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 17வயதுடைய நிஷானி பியுமிகா மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (ஜூன் 12) பாடசாலை முடிந்து வீடு திரும்பிய நிஷானி வீட்டில் செயற்படாத நிலையில் இருந்த தையல் இயந்திரத்தை இயக்க தவறான முறையில் மின்சார இணைப்பு வழங்கியதால் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.
இதனை அறிந்த அயலவர்கள் நிஷானியை பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் நிஷானி ஏற்கனவே உயிரிழந்துள்ளாரென பிலியந்தலை வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ திடீர் மரண விசாரணை அதிகாரி அஜித் விஜேசிங்க விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றார்.

கருத்து தெரிவிக்க