புதியவைவெளிநாட்டு செய்திகள்

விஷவாயு தாக்கி 11 பேர் பலி!

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் சுமார் 1,500 அடி ஆழத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த சுரங்கத்தில் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து சுரங்கத்துக்கு சீல் வைக்கப்பட்டதுடன் இது தொடர்பில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க