புதியவைவெளிநாட்டு செய்திகள்

இளவரசி டயானா எழுதிய கடிதங்கள் ஏலத்திற்கு விடப்படவுள்ளன!

பெவர்லி ஹில்சில் உள்ள ஜூலியன்ஸ் ஏல நிறுவனத்தால், பிரித்தானிய இளவரசி டயானா தனது முன்னாள் வீட்டு பணியாளர் மவுட் பென்ட்ரேவுக்கு, 1981-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரையிலான 14 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அட்டைகளும் பல உணர்வுபூர்வமான கடிதங்களும் மற்றும் இளவரசர் சார்லசை மணந்த பிறகு அவர்கள் எழுதிக் கொண்ட கடிதங்களும்
ஏலத்திற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இளவரசி டயானாவின் கையால் எழுதப்பட்ட செய்திகள், அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் என்பவற்றை இந்த கடிதங்கள் வெளிப்படுத்தும் என்பதால் குறித்த ஏலத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க