இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

யாழ் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு 43 வருடங்கள் நிறைவு

தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்று இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமையப்பெற்ற பொதுசன நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வாகும்.இச்சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 43 ஆண்டுகள் கடந்துள்ளன.

அதனடிப்படையில் இன்று 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வானது யாழ் பொதுசன நூலகத்தில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வானது யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்றதோடு நினைவேந்தலில் யாழ் பொதுசன நூலகத்தின் பிரதம நூலகர் சிவகரன் அனுசியா,நூலக ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் நூலகம் எரிக்கப்பட்டபோதும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகளின்போதும் உயிரிழந்தவர்களுக்காக சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க