பண்பாடுபுதியவை

கொழும்பில் நடைபெற்ற இசைத்தமிழ் விழா!

கொழும்பு தழிழ் சங்கரப்பிள்ளை மண்டபத்தில், சுவாமி விபுலானந்தர் துறவு பூண்டு நூற்றாண்டு நிறைவையொட்டி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் “இசைத்தமிழ் விழா” சங்கத் தலைவர் கலாநிதி க. இரகுபரன் தலைமையில் நடைபெற்றது.

சுவாமி விபுலானந்தார் சிலை சைவ மங்கையர் வித்தியாலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்ததுடன் தொடர்ந்து இராமகிருஸ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மனாந்தஜீ மாலை அணிவித்தபின் ஞானசேகரன், ஞானலக்ஷ்மி தம்பதியினர் மங்கள விளக்கேற்றி விழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க