உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டம்!

இன்று (27) திருகோணமலை கொழும்பு பிரதான வீதியின் 96ஆவது குறுக்கு வழியில்,
ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணுமாறு கோரி திருகோணமலை கந்தளாய் முள்ளிபொத்தானை சிங்கள வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன், பின்னர் தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க