உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இங்கிலாந்தில் பொதுத்தேர்தல் குறித்து பிரதமர் அறிவிப்பு

இங்கிலாந்தில் ஜூலை 4 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை பொறுத்தவரை அரசியலமைப்பு ரீதியாக 2025 ஜனவரிக்குள் அங்கு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.இது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்து பொதுத் தேர்தலானது 2024 இன் பிற்பகுதியில் நடைபெறும் என கூறியிருந்தார்.

இங்கிலாந்தில் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள், அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ டவுனிங் ஸ்ட்ரீட் அறிக்கையில் ரிஷி சுனக் தேர்தல் திகதியை அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டியிருந்தன.

இதனிடையே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று (மே 22) நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்தில் ஜூலை 4 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கருத்து தெரிவிக்க