இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கார் பந்தயத்தில் படுகாயமடைந்த மாணவி உயிரிழப்பு

2024 ஃபொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயம் கடந்த மாதம் ஏப்ரல் 21 ஆம் திகதி தியத்தலாவை நரியகந்த பந்தய திடலில் இடம்பெற்றது. அன்று மாலை பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பந்தயத்திடலை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 07 பேர் உயிரிழந்திருந்தனர்.

மேலும்,அவ்விபத்தில் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த கல்எதண்ட பிரதேசத்தை சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி நேற்று (மே 15 ) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தியத்தலாவை ஃபொக்ஸ் ஹில் கார் பந்தயத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 08 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்து தெரிவிக்க