இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

நான்கு வருடங்களுக்கு பின் இராணுவ சோதனை சாவடி நீக்கம்


கொரோனா காலப்பகுதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்குகள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டுகளை கண்காணிப்பதற்காக பல பாகங்களிலும் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

அவற்றுள் கொரோனா காலப்பகுதியில் ஏ9 வீதியில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடி மாத்திரம் அகற்றப்படாமல் தொடர்ந்தும் நான்கு வருடங்கள் நிரந்தர இராணுவ சோதனைச் சாவடியாக இயங்கிய வந்தது.

இந்நிலையில் குறித்த இராணுவ சோதனைச் சாவடி மே 14 முதல் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க