இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இதுவரை யுக்திய சுற்றிவளைப்பில் கைதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் மற்றும் பாதாளக்குழுக்களை ஒடுக்கும் ‘யுக்திய’ பொலிஸ் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஆரம்பம் தொட்டு இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்,இவர்களில் 4472 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இச்சுற்றிவளைப்பின் ஊடாக 43 கிலோ ஐஸ் போதைப்பொருள்;41 கிலோ ஹெரோயின் ;3 லட்சம் போதை வில்லைகள் மற்றும் 1500 மில்லியன் ரூபாய் சட்டவிரோத சொத்துக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க