இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் திருத்தச்சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைப்பு

“ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி” என்ற தொனிப்பொருளில் கடந்த மே 09ம் திகதி ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் திரு.கனக ஹேரத்
தேசிய இணையப் பாதுகாப்புச் சட்டத்தை மே மாதம் வரைவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் திருத்தச்சட்டமானது பாராளுமன்றத்தில் நேற்று (மே 10) முன்
வைக்கப்பட்டிருந்தது.

இச்சட்டமானது 28 வருடங்களுக்கு பின்னர் திருத்தப்படவுள்ளதாக அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

இதுவரை உரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களே தமக்கான தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணித்து வந்துள்ளதாகவும் அவற்றுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு 50% நிதியையும் உரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்குவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்ததோடு
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயற்றிறனை அதிகரித்தல் மற்றும் 4G தொழில்நுட்பத்தை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தல் ஆகிய நோக்கங்களை ​தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் திருத்தச் சட்டமூலத்தினூடாக அடைய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க