உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

க.பொ. த.சாதாரண தரப் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தம்!

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் க.பொ.த.சாதரண தரப் பரீட்சையில்,பரீட்சை நேரம் முடிவடைவற்கு 10 நிமிடங்கள் முன்னதாக மாணவர்களிடம் இருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன்,வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனைக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்த நிலையில்
குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வலயக் கல்விப் பணிமனை குறித்த பரீட்சை நிலையத்
தில் மேற்பார்வையாளராக கடமையாற்றிய ஆசிரியர் ஒருவரை இடைநிறுத்தி
உதவி மேற்பார்வையாளராக ஒருவரை நியமித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க