இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கட்சியின் அதிகாரத்தை நாமே கைப்பற்றுவோம்-சேனக டி சில்வா தெரிவிப்பு

எமது தேசிய முண்ணணியின் முன்னாள் தலைவரும்,முன்னாள் இராஜாங்க அமைச்சரான டயானா கமகேவின் கணவருமான திரு.சேனக டி சில்வா நேற்று (மே 10) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதன் போது சமகி ஜன பல வேகய கட்சியின் ஆட்சியை நாமே கைப்பற்றுவோம் எனவும்,ஒருபோதும் இக்கட்சியின் சின்னத்தில் சஜித் பிரேம தாசவை போட்டியிட அனுமதிக்க மாட்டோம் எனவும், எதிர்காலத்தில் அதற்கு தேவையான அனைத்தும் சட்ட ரீதியிலான ஏற்பாடுகளையும் மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும்,இது குறித்து சேனக டி சில்வா குறிப்பிடுகையில் தானே இக்கட்சியின் தலைவராக செயற்பட்டதாகவும்; பின்னர் இப்பதவியினை விட்டு விலகியதோடு சஜித்திற்கு இதனை வழங்கியுள்ளதாகவும்
இக்கட்சியின் செயலாளராக திருமதி.டயானா செயற்பட்டார் என்றும் சுற்றிக்காட்டி இருந்தார்.

கருத்து தெரிவிக்க