உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

தற்கொலைக் குண்டுதாரிகள் 6 வாடகை வீடுகளை பயன்படுத்தினர்

“சங்ரிலா” மற்றும் “சினமன்காடன்” விருந்தகங்களில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்திய சகோதரர்கள் இருவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 6 வீடுகளை வாடகைக்கு எடுத்திருந்தனர்.
இந்த வீடுகளை அவர்கள் காலத்துக்கு காலம் பயன்படுத்தி வந்ததாக குற்றப்புலனாய்வுத்துறையினர் நேற்று நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
இவர்கள், பிபிலை, படல்கும்புர, கொச்சிக்கடை, கொழும்பு 3,கல்கிஸ்ஸை, லக்கி பிளாஸா, ஆகிய இடங்களிலேயே இந்த வீடுகளை வாடகைக்கு எடுத்திருந்தனர்.
அத்துடன் அவர்கள் இரண்டு வெக்னஆர் வாகனங்கள், இரண்டு வெசல் வாகனங்கள், இரண்டு அல்டோ வாகனங்கள் இரண்டு முச்சக்கர வண்டிகளையும் வாடகைக்கு அமர்த்தியிருந்ததாக குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.

கருத்து தெரிவிக்க