இலங்கைஉள்நாட்டு செய்திகள்

கிளிநொச்சியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

இன்று (26.04) கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பொலிஸார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க