இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ​கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

நேற்று (25) காலை வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 1,000 மில்லிக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும் இவை விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது பாவனைக்காக வைத்திருந்தாரா போன்ற கோணத்தில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க