உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

ரிசாத்தை கைதுசெய்யவே வேண்டும்- எஸ்பி திஸாநாயக்க

முன்னாள் அமைச்சர் எஸ்பி திஸாநாயக்க, தொடர்ந்தும், அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

தேசிய தௌஹீத் ஜமா அமைப்புடன் ரிசாத் பதியுதீன், தொடர்புகளை கொண்டுள்ளார். அத்துடன் அவர்களின் செயற்பாடுகளுக்கு உதவியையும் அளித்திருந்தார்.

எனவே அவரை கைதுசெய்யவேண்டும் என்று அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்;.
தற்போது மீண்டும் அந்தக்கோரிக்கையை அவர் விடுத்;துள்ளார்.

அமரிக்காவின் சூழ்ச்சி முகவர்கள், சிரியா, ஈராக், மற்றும் லிபியா போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றத்துக்காக, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவர்.

இதன் அடிப்படையிலேயே இலங்கையிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்ரஸாக்கள், முஸ்லிம் சமயப்பாடசாலைகள் மூடப்படவேண்டும்.

கிழக்கின் முஸ்லிம் பல்கலைக்கழகக் கல்லூரி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கிPழ் கொண்டு வரப்படவேண்டும்.

 

கருத்து தெரிவிக்க