உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

ஏனைய இன மக்களிடமும் கத்திபோன்ற ஆயுதங்கள் – ஹக்கீம்

முஸ்லிம்களின் வீடுகளில் இருந்து மீட்கப்படும் வாள்கள் மற்றும் கத்திகள் போன்றவை தற்பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்தவை என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைக்குறிப்பிட்டார்.

நாட்டில் இடம்பெறும் தேடுதல்கள் தொடர்பில் ஊடகங்கள் தேவையற்ற பிரசாரங்களை முன்னெடுக்கின்றன.

எனினும் இதன்போது கைப்பற்றப்படும் ஆயுதங்கள் சுயபாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருப்பவை.
நாட்டின் ஏனைய சமூகங்களின் வீடுகளில் தேடுதல்களை நடத்தினாலும் இவ்வாறான ஆயுதங்களை கண்டுபிடிக்கமுடியும் என்றும் ஹக்கீம் கூறினார்.

 

கருத்து தெரிவிக்க