இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

சிவனொளிபாதமலையில் இருந்து ஒருவர் சுமார் 100 மீற்றர் பள்ளத்தில் விழுந்து காயம்!!

நேற்று (29.03) இரத்தினபுரி – சிவனொளிபாதமலை வீதியின் எஹலகனுவ பிரதேசத்தில் ஒருவர் பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார் 100 மீற்றர் பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இந்திய பிரஜையான குறித்த வெளிநாட்டவரை அவ்விடத்திலிருந்து மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தியாவின் மும்பையில் வசிக்கும் பாரத் சந்திரதாஸ் என்ற 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க