புதியவைவெளிநாட்டு செய்திகள்

மூன்று நாடுகளுடன் நெறுக்கமான உறவுகளை உறுவாக்க சீனா முயற்சி!!

பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்பது குறித்து ஆலோசிக்க சீன இராணுவக் குழு ஒன்று அண்மையில் மாலைதீவு, இலங்கை மற்றும் நேபாளத்துக்குச் சென்றுள்ளதாக பீய்ஜிங் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பீய்ஜிங் தெற்காசியாவில் அதன் மூலோபாய போட்டியாளரான இந்தியாவின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கான உந்துதலில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க முயன்று வருகிறது

குறித்த மூன்று நாடுகளிலும், “இராணுவ உறவுகள் மற்றும் பொதுவான அக்கறையின் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களை சீனக்குழுவினர் பரிமாறிக் கொண்டனர்” என்று சீன இராணுவம் அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது

கருத்து தெரிவிக்க