புதியவைவெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானின் ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி பதவி ஏற்பு!!

பாகிஸ்தானில் கடந்த மாதம் 8திகதி பாராளுமன்ற தேர்தல் கடும் பரபரப்புக்கு மத்தியில் நடந்து முடிந்தது.

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வியின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் ஜனாதிபதி தேர்தலும் நடைபெற்றது.
இதில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர் தாரி 411 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அச்சக்சாய் 181 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இதன்மூலம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெற்றார்.

இந்நிலையில், அவரது பதவியேற்பு விழா தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது நாட்டின் 14-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிப் அலி சர்தாரிக்கு பாகிஸ்தான் தலைமை நீதிபதி காசி பேஸ் இசா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கருத்து தெரிவிக்க