இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் நேற்று (16.02) காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய செபமாலை மோசரின் என்பவரே வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

அப் பகுதி மக்களின் துணையுடன் அவர் மீட்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் பொலிசாரால் ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க