இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

தொழில்நுட்ப கோளாரினால் மீண்டும் தரையிரக்கப்பட்ட ஶ்ரீ லங்கன் விமானம்

UL 605 AIRBUS A-3 30 வகையை சேர்ந்த விமானமொன்றே இவ்வாறு தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளாகியுள்ளது.மெல்பேர்ன் நேரப்படி நேற்று (12.02) மாலை 6.18 அளவில் பயணத்தை ஆரம்பித்துள்ளதுடன் தொழில்நுட்ப கோளாரினால் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் பயணித்த 15 விமான ஊழியர்கள் மற்றும் 202 பயணிகளுக்கான தங்குமிட வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக ஶ்ரீ லங்கன் விமான சேவையின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு நிவர்த்தி செய்யப்பட்டு மீண்டும் இலங்கை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க