உலகம்வெளிநாட்டு செய்திகள்

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் கிரின்டாவிக் நகரில் வெடித்து சிதறிய எரிமலை

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இதன்போது எரிமலையில் இருந்து பெருமளவிளான தீப்பிழம்புகள் வெளியேறியதோடு சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருப்பு குழம்புகளாக வழிந்தோடியதாக குறிப்பிடப்படுகிறது.

 

இதற்கிடையே குறித்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட செயற்படும் எரிமலைகள் அமைந்துள்ளன.அந்நிலையில் இறுதியாக கடந்த டிசம்பர் மாதத்தில் எரிமலை வெடிப்பு ஒன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க