இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பெலியத்த கொலை சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் மேலும் ஒருவர் கைது!

பெலியத்தவில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் மேலும் ஒருவர்  நேற்று ஹபராதுவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 28 வயதுடைய ரத்கம, கட்டுடம்பே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ‘எங்கள் மக்கள்  கட்சியின்’ (அபே ஜன பல) தலைவர் சமன் பெரேரா என்ற ரோயல் பீச் சமன் உட்பட 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க