இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியல்

தரமற்ற Human Immunoglobulin ஊசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்படட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார். வைத்திய அதிகாரிகளின் பரிந்துரைக்கு அமைய, அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க