உலகம்சமீபத்திய செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

எத்தியோப்பியாவில் மலேரியா தொற்று உறுதி

இந்த வருடம் எத்தியோப்பியாவில் இது வரையான காலப்பகுதியில் மாத்திரம் 328,881 பேருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

உலக சுகாதார ஸ்தாபன வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 28 நாட்களில் மாத்திரம் ஆபிரிக்காவின் கிழக்கு பகுதியில் 84 பேர் மலேரியா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மலேரிய தொற்றினை கட்டுபடுத்தும் நோக்கில் அதனை தடுப்பதற்கான சிகிச்சைகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

எத்தியோப்பியாவில் சுமார் ஏழு வருடங்களுக்கு பின்னர் மலேரியா தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க