இலங்கைஉள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்

76வது சுகந்திர தின விழா அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

76 ஆவது சுதந்திர தின விழாவை நாளை (04) காலி முகத்திடலில் நடத்துவதற்கான தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

‘புதிய நாட்டை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.

இவ்வாண்டு சுதந்திர தின கொண்டாட்ட பிரதம விருந்தினராக தாய்லாந்து பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார்.இம்முறை சுதந்திர தின விழாவை பல்வேறு கலை நிகழ்வுகள் அலங்கரிக்கவுள்ளதுடன், முப்படைகளின் அணிவகுப்புகளும் கோலாகலமாக இடம்பெறவுள்ளன.

மரியாதை அணிவகுப்பிப்பில் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 3,461 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆயுதம் தாங்கிய வாகனங்கள் உள்ளிட்ட 69 வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்தி 19 விமானங்களும் இம்முறை சுதந்திர தின கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்துகொள்ளவுள்ளன.

7 ஹெலிகொப்டர்கள், 16 ரக 5 விமானங்கள், 3 ஜெட் விமானங்கள் என்பன இதில் உள்ளடங்குகின்றன.இலங்கை கடற்படையின் 1009 உறுப்பினர்களும் இம்முறை சுதந்திர தின கொண்டாட்ட அணிவகுப்பில் இணையவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க