அழகு / ஆரோக்கியம்இதழ்கள்

நீலி அவுரி இலையின் நன்மைகள்!

அவுரி எனப்படும் நீலி இலைகள் சாயம் தருவது மட்டுமின்றி மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டது. இயற்கையாக கிடைக்கும் நீலி அவுரி 18 வகையான விஷங்களை நீக்கும் வல்லமை பெற்றது.

முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் பயன்படுத்தும் தைலங்களில், கரிசாலை, நெல்லிக்காய் இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கப, வாத நோய்களைத் தீர்க்கும். வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும். நோய்களில் உதரம் என்னும் வயிறு வீக்கம், மண்ணீரல்  நோய்களை நீக்கும். உடல்எடை குறைதல் பிரச்னை தீர அவுரி வேரை பசும் பாலில் கலந்து பருக வேண்டும்.

முடி வளர்க்கும் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய் இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை அவுரியின் இலை மற்றும் காய்கள் மலச்சிக்களால் நோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுகிறது.

பல்லில் உள்ள கிருமிக்கு, நீலியின் வேரைக் கடித்துத் துப்ப தீரும். தீயால் ஏற்பட்ட கொப்புளங்களை சரியாக்க, அவுரி பயன்படும். வெளுத்த முடிக்கு இயற்கையாக கருப்பாக்க இந்த நீலி பயன்படும்.

கருத்து தெரிவிக்க