சினிமாசினிமா

“இருவர் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதைப் பற்றி தகாத முறையில் பேசுவது சரியல்ல”-கங்கனா

பொலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான ‘தலைவி’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது சர்ச்சை கருத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார். இந்த நிலையில் அயோத்தி குடமுழுக்கு விழாவுக்கு சென்று இருந்த கங்கனா அங்கு தொழில் அதிபர் ஒருவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட புகைப்படம் பரவியது.

இதனை தொடர்ந்து அந்த தொழில் அதிபரை கங்கனா காதலிப்பதாக தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளித்த அவர், “தொழில் அதிபரை காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அந்த தொழில் அதிபர் திருமணமாகி குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார். நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன். அவர் யார் என்பதை தக்க நேரத்தில் அறிவிப்பேன். அதுவரை பொறுத்து இருங்கள். இரண்டு பேர் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால் அவர்கள் உறவை பற்றி தகாத முறையில் யோசிப்பது பேசுவது சரியல்ல” என்றும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க