இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிறீதரன் வெளியிட்ட அறிவிப்பு

2009 இற்கு முன்னர் கூட்டமைப்பு எப்படி தமிழ் மக்களின் அசைக்கமுடியாத சக்தியாக மிளிர்ந்ததோ ,அதே நிலையை மீண்டும் எட்டவேண்டும் என்பதே தமிழ்மக்களின் பெருவிருப்பம் என சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டு வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்று தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியத்தை பலப்படுத்த வேண்டும் என்பதே எனது பெருவிருப்பம்.அதனை முன்னிறுத்தியே தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவிக்காக போட்டியில் நின்று இப்போது தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளேன் .எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க