இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டம்

இந்த வருடத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் ஐந்து மில்லியன் ரூபாவை பகுதி நேர வேலைவாய்ப்பு திட்டமொன்றிக்கு ஒதுக்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, முச்சக்கரவண்டித் தொழிலாளர் குழுவொன்று இதன் மூலம் பயனடைவதுடன் , முதற்கட்டமாக, ஹம்பாந்தோட்டையை இலக்காகக் கொண்டு எழுபது முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனூடாக சாரதிகளின் திறமைகளை மேம்படுத்துவற்கும் மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுவதற்கும் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதுடன் , முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நீர் குழாய் பராமரிப்பு , மின் பொறியியல், தச்சு, முடி வெட்டுதல் மற்றும் கட்டிட ஓவியம் போன்ற தெரிவு செய்யப்பட்ட தொழில்களில் தொழில்சார் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

கருத்து தெரிவிக்க