புதியவைவெளிநாட்டு செய்திகள்

காஸா : கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 178 பேர் பலி

காஸா பகுதியில் ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இதுவரை 25,000 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 178 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேலில் 1,300 பேரைக் கொன்று 240க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை எடுத்தபோது இஸ்ரேல் தனது தாக்குதலை ஒக்டோபர் 7 அன்று தொடங்கியது.

தாக்குதல் குறித்து ஹமாஸ் அமைப்பு நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்ததை தொடர்ந்து,

பலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதற்கு எதிரான மற்றும் பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கான ஒரு வழியாகவும் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

ஹமாஸ் போராளிகளில் 20 முதல் 30 சதவீதம் வரை இஸ்ரேலிய இராணுவம் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க