இந்தியா

இந்தியாவில் சிறப்பு ரயில்கள் ஆரம்பம்

நாளை மறுநாள் முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் கூடுதலாக ஜூன் 1-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. முன்னதாக ரயில்வே துறை அறிவித்த 200 ரயில்களில் தமிழகத்துக்கு எந்த ரயிலும் அறிவிக்கப்படவில்லை.

இதனிடையே தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்குத் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

அந்தக் கோரிக்கையில் கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்க இருப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்திருக்கிறது..

கருத்து தெரிவிக்க