இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவணிக செய்திகள்

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு

BBC செய்தி சேவையினால் நடாத்தப்பட்ட ஆய்வின் படி ஒரு வருடத்திற்குள் அத்தியாவசிய பொருட்களின் விலை 46 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று மரக்கறிகள், இரண்டு வகையான அரிசி, சீனி மற்றும் ஒரு வகை மீன் மற்றும் இரண்டு வகையான பழங்கள் அடங்கிய ஒரு பையின் விலை பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த BBC அறிக்கைமேலும் தெரிவிக்கிறது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குறித்த பொருட்கள் அடங்கிய ஒரு பையின் விலை 7176 ரூபாவாக இருந்த நிலையில் தற்போது 10454 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் ,மற்றும் வெளிச்சந்தையில் உள்ள தினசரி சில்லறை விலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க