உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

யால தேசியப் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

யால தேசியப் பூங்காவில் சிறு நீர்ப்பாசனத் தொட்டிகள் கசிவால் நுழைவாயில்கள் நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த யால தேசியப் பூங்காவின் பிரதான நுழைவாயில் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளதாக ஊவா வலய வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உபுல் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

பூங்காவிற்குள் உள்ள பிரதான வீதி வலையமைப்பு வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளைத் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கருத்து தெரிவிக்க