இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

“ஹரக் கட்டா” வுடன் தொடர்புடைய ஆறு பேர் CCD யினால் கைது

போதைப்பொருள் கடத்தல்காரர் என அடையாளம் காணப்பட்ட ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்னவுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் ஆறு பேர் வெலிகம மற்றும் அதுருகிரிய பிரதேசங்களிள் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 வயதிலிருந்து  43 வயதுடையவர்கள் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Also Readசுற்றுலாத்துறை மூலம் 6 பில்லியன் டொலர் வருமானம் ஈட்ட எதிர்பார்ப்பு: டயனா கமகே

கருத்து தெரிவிக்க