இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலங்கை மின்சார சபை ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 2ம் நாளாகவும் தொடர்கிறது!

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று வியாழக்கிழமை (04) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

உத்தேச சட்டமூலத்தின் ஊடாக இலங்கை மின்சார சபையை 12 நிறுவனங்களாக பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க