இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேட்டரிங் நிறுவன ஊழியர் ஒருவர் நேற்று பிற்பகல் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபத்கொடவில் வசிக்கும் 35 வயதுடைய நபர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு முனைய ஊழியர்களின் வாயில் ஊடாக 7.7 கிலோகிராம் எடையுள்ள 66 தங்க பிஸ்கட்டுகளை கடத்த முற்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விசேட ஹீட்டர் மூலம் தங்கத்தை கடத்த முற்பட்டதாகவும், பாதுகாப்பு சோதனைகளை புறக்கணிப்பதற்காக அந்த நபர் இரண்டு தனித்தனி பொட்டலங்களாக தங்க பிஸ்கட்களை தயார் செய்துள்ளதாக சுங்கப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட தங்கம் மற்றும் தங்கத்தின் கடத்த முயன்றவர்  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளின் விசாரணையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கருத்து தெரிவிக்க