இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வடக்கு சுமத்ராவுக்கு அப்பால் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இன்று காலை 10.49 மணியளவில் இந்தியப் பெருங்கடலில் வடக்கு சுமத்ராவுக்கு அப்பால் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

எனினும் நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் இலங்கைக்கு தற்போது சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் அதனால் இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ் அறிவிப்பு சம்பந்தப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து அறிவிக்கப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


கருத்து தெரிவிக்க