இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

யுக்திய நடவடிக்கையின் போது கடந்த 24 மணி நேரத்தில் 1,554 சந்தேக நபர்கள் கைது!

கடந்த 24 மணி நேர காலப்பகுதியில், யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 1,554 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 82 பேரிடம் தடுப்புக்காவல் உத்தரவுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  62 பேர் போதை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த 128 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கைது நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

கருத்து தெரிவிக்க