உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

VAT திருத்தம் அமுலுக்கு வருவதற்கு முன்னரே அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி அதிகரிப்பு!

வரும் ஜனவரி 1 ஆம் திகதி VAT திருத்த அமுலுக்கு முன்னரே வர்த்தகர்கள் பெருமளவிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் சுமார் 700 கொள்கலன் அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்ற போதிலும், கடந்த சில தினங்களில் அதன் பெறுமதி சுமார் 1000 கொள்கலன்களாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் சேதனப் பசளைக்கு VAT அறவிடப்படமாட்டாது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க