உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேசிய பட்டியலில் இடம் தேவையில்லை! பரணிதரன் பகிரங்கமாக தெரிவிப்பு

எனக்கு தேசியப் பட்டியலில் இடம் ஒதுக்குமாறு யாரும் தலைவரிடம் கோரிக்கை வைக்க வேண்டாம் என முருகேசு பரணிதரன் கோரியுள்ளார்.

தனது முகநூலில் பரணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்னமும் 5,000 வாக்குகள் கிடைத்திருந்தால் நேரடியாக பாராளுமன்றம் சென்றிருக்க முடியும். செல்லுபடியாகாத வாக்குகளின் எண்ணிக்கை அதைவிட அதிகம். எமது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிகளும் நமக்கு முழுமையான ஆதரவு தரவில்லை.

பல மேதாவிகள் மொட்டுக்கு வாக்குகளை வாங்கிக் கொடுத்து இனத்துரோகம் செய்து வாக்குகளை குறைத்துவிட்டனர்.நான் இனி முழுநேர அரசியல் களத்தில் மும்முரமாய் இருப்பேன். எனது மக்களுக்காக உயிரையும் கொடுப்பேன் என்றும் பரணிதரன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க