இலங்கைமுக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் கருணா கருத்து!

18 வயதுக்கும் குறைந்தவர்களை அமைப்பில் இணைந்துக்கொள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முற்றாக தடைவிதித்திருந்தாக கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்த கருணா ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கும் போதே இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், விடுதலைப் புலிகள் அமைப்பு என்றுமே போராளிகளாக சிறுவர்களை பயன்படுத்தவில்லை. எனினும் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள விடுதலைப் புலிகளின் சிறார் போராளிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த படங்களில் இருப்பவர்கள் சிறார் போராளிகள் அல்ல. விடுதலைப் புலிகள் அமைப்பு பிரசார நடவடிக்கைகளுக்காக தயாரித்த நாடகங்களில் பயன்படுத்திய சிறார் நடிகர்களின் புகைப்படங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க