இந்தியா

உத்தர பிரதேச மாநிலத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பலி!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் மோதி நகரில் அமைந்துள்ள மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் இன்று மாலை 3 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்து காரணமாக, தொழிற்சாலையில் தீ பற்றி எரிய தொடங்கியது. அப்போது தொழிற்சாலையில் பணியில் இருந்த ஊழியர்கள் 7 பேர் அந்த இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தனர்.

மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது, இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகிஆதித்யநாத் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க